சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

 

சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி தற்போது கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், மீனம்பாக்கம், அசோக்நகர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.