சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

 

சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

சென்னையில் அண்ணா சாலை, கிரீன்வேஸ் சாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை வருவதற்கான அறிகுறியுடன் வானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

அதேபோல் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.