தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக ஏற்காட்டில் 9 செமீ மற்றும் தருமபுரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.