தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
Sep 7, 2020, 12:29 IST1599461989000
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 18 செமீ, ஆலங்குடியில் 12 செமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.