தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

அந்தமான், மத்திய வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.