4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!

 

4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக செய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!

ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை ,தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சிவகங்கை மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!

கடலூர் ,விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ,திருச்சி, கரூர், மயிலாடுதுறையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகை ,தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.