அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை!

 

அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, புதுக்கோட்டை , சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை!

தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் நாளை 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.