3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை!!

 

3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை!!

நீலகிரி, கோவை, தேனியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை!!

வெப்ப சலனம் காரணமாக நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் , தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம் , நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி , திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை!!

நாளை நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு . வருகின்ற 16 மற்றும் 17ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,திண்டுக்கல், தேனி ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.