கேரளாவில் மூணாறு அருகே கடும் நிலச்சரிவு : 5 பேர் பலி; 80 பேர் மாயம்!

 

கேரளாவில் மூணாறு அருகே கடும் நிலச்சரிவு : 5 பேர் பலி; 80 பேர் மாயம்!

கேரள மாநிலம் மூணாறில் பெட்டி மூடி என்ற பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் அங்கேயே குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

கேரளாவில் மூணாறு அருகே கடும் நிலச்சரிவு : 5 பேர் பலி; 80 பேர் மாயம்!

இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள இருபது வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளன. இதில் சுமார் 80 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் மூணாறு அருகே கடும் நிலச்சரிவு : 5 பேர் பலி; 80 பேர் மாயம்!

மேலும் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது.