ராமேஸ்வரம் சேது மாதவர் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

 

ராமேஸ்வரம் சேது மாதவர் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள சேது மாதவர் சன்னதியில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது.

ராமேஸ்வரம் சேது மாதவர் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

இதனையொட்டி, ராமநாதசுவாமி கோயிலில் இருந்து பிற்பகல் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டி ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி, சிவ தீர்த்தத்தில் நீராடினர். பின்னர் சேது மாதவர் சன்னதியை வந்த அடைந்தனர். மாலை பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளி மேலரத வீதியில் உள்ள சேது மாதவர் சன்னதியை வந்தடைந்த பின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரம் சேது மாதவர் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

அப்போது சேது மாதவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் கலந்துகொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.