“மகனை உதைத்து ,மாமியாரை அடித்து ….”கொடுமை செய்த மனைவியை போலீசில் பிடித்து கொடுத்த கணவன்.

 

“மகனை உதைத்து ,மாமியாரை அடித்து ….”கொடுமை செய்த மனைவியை போலீசில் பிடித்து கொடுத்த கணவன்.

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் சக்ரதார் என்பவரும், அவரின் மனைவி ரோஜலின்
நாயக் என்ற பெண்ணும் தங்களின் மகன் மற்றும் மாமியாரோடு வசித்து வந்தார்கள் .அப்போது திடீரென இந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .இதனால் தன்னுடைய கணவன் கடைக்கு சென்றதும் அந்த மனைவி தினமும் தன்னுடைய மகனை கயிறு போட்டு கட்டிவைத்து அடித்து துன்புறுத்துவாராம் ,அது மட்டுமல்ல அவருடைய வயதான மாமியாரையும் இது போல கட்டி வைத்து அடித்து கொடுமை செய்வார்.

“மகனை உதைத்து ,மாமியாரை அடித்து ….”கொடுமை செய்த மனைவியை போலீசில் பிடித்து கொடுத்த கணவன்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட அவரின் கணவர் சக்ரதார் அந்த வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமெரா வைத்து தன்னுடைய மனைவியை கண்காணித்தார் .அப்போது அவர் தன்னுடைய மகன் மற்றும் தாயாரை அடித்து கொடுமை படுத்தும் காட்சிகளை அதில் பார்த்து அதிர்ந்தார் .அந்த காட்சியை பிறகு அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டார் .பிறகு தன்னுடைய மனைவி மீது போலீசிலும் புகாரளித்தார் .போலீசார் அந்த வீடியோ காட்சியை பார்த்து அவரின் மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் .அப்போது அந்த மனைவி தன்னுடைய கணவன் தன்னை சரியாக பார்த்துக்கொள்வதில்லை என்றும் ,குடும்ப செலவுக்கு கூட பணம் தருவதில்லை என்றும் கூறினார் .அதனால்தான் தான் அப்படி நடந்து கொண்டதாக அவர் கூறினார் .இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்

“மகனை உதைத்து ,மாமியாரை அடித்து ….”கொடுமை செய்த மனைவியை போலீசில் பிடித்து கொடுத்த கணவன்.