மனிதனை விஞ்சும் மிருகங்களின் பாசம்… இதயம் உருகச் செய்யும் வீடியோ !

 

மனிதனை விஞ்சும் மிருகங்களின் பாசம்… இதயம் உருகச் செய்யும் வீடியோ !

ஒரு சிறுத்தை மற்றும் அதன் குட்டிகள் சிறிய ஓடை ஒன்றைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வனத்துறை அதிகாரி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 30 வினாடிகள் உள்ள இந்த வீடியோ மிருகங்கள் எப்படி தங்கள் குட்டிகளை எவ்வாறு அரவணைத்து வளர்க்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு!

மனிதனை விஞ்சும் மிருகங்களின் பாசம்… இதயம் உருகச் செய்யும் வீடியோ !

ஒரு பனி சிறுத்தை மற்றும் அதன் மூன்று குட்டிகள் ஓடையைக் கடக்கும் இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிறுத்தை நீரோடையை எளிதாக கடந்துவர, அதன் மூன்று குட்டிகள் செய்வதறியாது நிற்கின்றன. பின் சிறுத்தை மீண்டும் சென்று இரு குட்டிகளை லாவகமாக கவ்வி எடுத்து ஓடையின் மறுபக்கம் வந்து விடுகிறது இதற்கிடையில் ஒரு குட்டி தானே வீறுநடை போட்டு ஓடையை சுயமாக கடந்து வரும் காட்சி பார்ப்போர் நெஞ்சங்களை உருகச்செய்கிறது.

இதைப் பகிர்ந்த வனத்துறை அதிகாரி. “வாழ்க்கை. அது எல்லா இடங்களிலும் செழித்து வளர்கிறது. டிரான்ஸ் இமயமலையில் கேமராவில் பிடிக்கப்பட்ட இந்த பனிச்சிறுத்தை குடும்பத்தை எப்படி வளர்க்கிறது என்று பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.