மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தக்கோரிய வழக்கு: தமிழக அரசு விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவு

 

மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தக்கோரிய வழக்கு: தமிழக அரசு விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் உலர், சவுடு, வண்டல், சரளை மண் எடுக்க அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட கோரியும் தமிழ்நாடு மணல் கழகத்தை அமைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தக்கோரிய வழக்கு: தமிழக அரசு விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவு

அதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பதில் மனு தாக்கல் செய்த நிலையில், டாஸ்மாக் விற்பனையை போல மணல் விற்பனையையும் ஒழுங்குப்படுத்தக் கோரிய வழக்கில் அரசு விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து முத்தரசன் தொடர்ந்து அந்த வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.