“கடனை கேட்டார் -கழுத்தை அறுத்தார்”-பணம் கேட்ட பெண்ணை ஓடும் காரிலேயே பிணமாக்கிய டிரைவர்..

 

“கடனை கேட்டார் -கழுத்தை அறுத்தார்”-பணம் கேட்ட பெண்ணை  ஓடும் காரிலேயே பிணமாக்கிய டிரைவர்..

கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட ஒரு பெண்ணை ஓடும் காரிலேயே கொலை செய்த சம்பவம் கொல்கத்தாவின் முக்கிய சாலையில் அரங்கேறியுள்ளது .
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் முதியாலியில் பணி புரிகிறார் .அவரிடம் ஒரு கால் டாக்ஸி டிரைவர் கடன் வாங்கியிருந்தார் .ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர் வாங்கிய கடனை செலுத்தாமல் அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார் .

“கடனை கேட்டார் -கழுத்தை அறுத்தார்”-பணம் கேட்ட பெண்ணை  ஓடும் காரிலேயே பிணமாக்கிய டிரைவர்..
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று அந்த ட்ரைவரின் காரில் அந்த பெண் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அவர் அந்த ட்ரைவரிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார் .அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அந்த சண்டையில் கோபமான அந்த ட்ரைவர் அந்த பெண்ணை ஓடும் காரிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் .பிறகு அந்த பெண்ணின் உடலை
ஈ.எம் பைபாஸிலிருந்து ஒதுங்கிய ஒரு இடத்திலுள்ள ஒரு கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளார் .
ஒரு பெண்ணின் அழுகிய உடல் கிடப்பதால் வந்த துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே ,விரைந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு இந்த கொலை பற்றி போலீசார் விசாரித்து ,அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் கொலை செய்த அந்த ட்ரைவரை கைது செய்து சிறையிலடைத்தனர் .