ஓவரா சிகரெட் பிடிக்கிறீங்களா? -அப்ப இதுல ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ?

 

ஓவரா சிகரெட் பிடிக்கிறீங்களா? -அப்ப இதுல ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ?

உலகில் ஒவ்வொரு ஆண்டும் சிகரெட் பழக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் நுரையீரல் கெட்டு இறந்து போகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது .அப்படி அதிகமா ‘தம்’ அடிப்போருக்கும் ,திடீரென விழிப்பு வந்து அதை நிறுத்தியிருப்போருக்கும் ஒரு அற்புத பானம் உள்ளது .அதை வீட்டில் தயாரித்து குடித்து உங்களின்  நுரையீரலை சரி பண்ணிக்கோங்க.

ஓவரா சிகரெட் பிடிக்கிறீங்களா? -அப்ப இதுல ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ?

சிகரெட் பிடிப்பது, பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் , அவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிப்பதாலும் அவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தயாரித்துச் சாப்பிடலாம்.

தேவையான பொருள்:

அதிமதுரப் பொடி அரை ஸ்பூன்

இஞ்சி சாறு ஒரு ஸ்பூன்

எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன்

தேன் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அதில் அரை ஸ்பூன் அளவு அதிமதுரப்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக கொதித்து வர வேண்டும்.

எப்பொழுது இஞ்சியை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி இஞ்சி சாற்றை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்து விட்டு மிதமான சூட்டில் இருக்குமாறு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்.

இதில் நாம் ஏற்கனவே செய்து வைத்திருந்த இஞ்சி சாற்றை ஊற்றவும்.

பின் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

தேவையான அளவிற்கு ஏற்ப தேன் சேர்த்து நன்றாக கலந்து பருக வேண்டும்.

இது படுக்க செல்வதற்கு முன்பும் , சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்குப் பின்பும்  இதை உண்டு வரவேண்டும்.

இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.

ஒரு வாரத்திற்கு மேல் செய்ய வேண்டாம்.

ஒரு வாரத்திலேயே உங்களது மூச்சுப் பாதையில் உள்ள பிரச்சனை நீங்குவது கண்கூடாக காண்பீர்கள் பயன்படுத்தி கண்டிப்பாக பயன்பெறுங்கள்.இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தும் சிகெரெட்டை இனியாவது விடுங்க ,உங்க நுரையீரலை ஆரோக்கியமா வச்சுக்கோங்க .