“ஒரு நர்ஸுக்கே இந்த நிலையா” -தொடரும் கொரானா பேஷண்டுகளின் பலாத்காரம்
கேரளாவில் ஒரு 19 வயது கொரானா பாதித்த இளம் பெண் ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் , கொரானா டெஸ்ட் ரிசல்ட் வாங்க போன ஒரு நர்ஸ் பாலியல் கொடுமைக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலம் மல்லாபுரத்தில் செவிலியராக பணிபுரிந்த ஒரு பெண் சமீபத்தில் திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள குலத்துப்புழாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார் .அப்போது அந்த ஊரில் அவருக்கு கொரானா டெஸ்ட் எடுக்கப்பட்டது அந்த ரிசல்ட்டும் அவருக்கு நெகடிவ் என்று வந்துள்ளது .இதனால் தன்னுடைய ரிசல்ட்டை வாங்குவதற்கு அங்குள்ள ஹெல்த் இன்ஸ்பெக்டர் பிரதீப் வீட்டிற்கு அந்த நர்ஸ் சென்றார் ,அப்போது அந்த இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ,மேலும் அந்த வீட்டிலேயே அவரை அடைத்து வைத்து மறுநாள் தான் அனுப்பியுள்ளார் .
இதனால் அந்த நர்ஸ் பயந்து போய் இந்த விஷயத்தை தன்னுடைய நண்பர்களிடம் கூறியதும் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகாரை அங்குள்ள காவல் நிலயத்தில் கொடுத்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பிரதீப்பை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்