நின்றுகொண்டே சாப்பிடுவதை நிறுத்தலேன்னா ,நோயெல்லாம் உங்களை துரத்தும் .

 

நின்றுகொண்டே சாப்பிடுவதை நிறுத்தலேன்னா ,நோயெல்லாம் உங்களை துரத்தும் .

நம் நாட்டு மக்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது நாம் சாப்பிடும் சத்தான உணவுகள் மட்டுமின்றி ,உணவை நாம் சாப்பிடும் முறையும் நம் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரை நாம் தரையில் சம்மணங்கால் போட்டு சாப்பிட்டு வந்தோம் ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது.இந்த அவசர உலகில் நாம் நின்று கொண்டே சாப்பிடுகிறோம் .
இனி நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம்.

நின்றுகொண்டே சாப்பிடுவதை நிறுத்தலேன்னா ,நோயெல்லாம் உங்களை துரத்தும் .

செரிமானக்கோளாறு
மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை பல துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

அதிகமாக சாப்பிட தூண்டுதல்
அது மட்டுமல்லாமல் நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிக சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

நின்றுகொண்டே சாப்பிடுவதை நிறுத்தலேன்னா ,நோயெல்லாம் உங்களை துரத்தும் .

பசி எடுத்தல்
நீங்கள் பசியாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் வழி உங்கள் வயிற்றில் எவ்வளவு உணவு உள்ளது என்பதை கண்டறிவதுதான். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் உங்களுக்கு பசி எடுக்க தொடங்கிவிடும்.

வீக்கம்
விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால், மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அதனால் கல்யாண வீடுகளின் பஃபே முதல் கையேந்தி பவன் வரை இனி நின்று கொண்டு சாப்பிடாமல் அமர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் ,நோய்களை விரட்டுவோம் .