செல்பி எடுக்கிற மாதிரி அடிக்கடி ஸ்கேன் எடுப்பீங்களா? -உங்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கு தெரியுமா?

 

செல்பி எடுக்கிற மாதிரி அடிக்கடி ஸ்கேன் எடுப்பீங்களா? -உங்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கு தெரியுமா?

கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. நோயைக் கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யாமலேயேகூட சி.டி. ஸ்கேன் எடுப்பவர்களும் உள்ளனர். கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை சி.டி. ஸ்கேன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தொற்றை உறுதி செய்யவும், தொற்றின் பாதிப்பைக் கண்டறியவும் சிலர் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுக்கவேண்டிய நிலையும் உண்டாகிறது.

லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்..

செல்பி எடுக்கிற மாதிரி அடிக்கடி ஸ்கேன் எடுப்பீங்களா? -உங்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கு தெரியுமா?

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. நிறைய பேர் சி.டி. செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்.

சி.டி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் கோவிட்-19 தொற்றை மட்டும் கண்டறிவதற்கு ஒரு குறியீடு உள்ளது. அதை CO-RADS என்பார்கள். கோவிடுக்கான ரேடியாலஜி ஸ்கோர் என்பதன் சுருக்கம்தான் அது. சி.டி ஸ்கேன் எடுத்த பிறகு தொற்றின் தன்மையைப் பொறுத்து 1 முதல் 6 வரை CO-RADS மதிப்பெண் வழங்கப்படும்.