பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

 

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரதமரின் தனிப்பட்ட சுகாதாரத்துறை ஆலோசகருமான மருத்துவர் ஜாஃபர் மிர்ஸாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானில் 2 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 50 பேர் உயிரிழந்ததையடுத்து 4 ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் ஜாஃபர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.