சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்!

 

சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்!

வாணியம்பாடி அருகே சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன். இவர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு திரும்பிய நிலையில், அவரது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன் குடும்பத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்!

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே, தீ வீடு முழுவதும் பரவியதால் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்திருக்கிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் விசாரணை நடத்தி வருகின்றனர்.