இளமை ஊஞ்சலாட நினைக்கிறவங்க இதை தினம் சாப்பிடணும் !

 

இளமை ஊஞ்சலாட நினைக்கிறவங்க இதை தினம் சாப்பிடணும் !

புதினா ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். இதை நாம் உணவில் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்.அது செய்யும் அற்புதங்களை சொல்லி மாளாது .
பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி, ஒற்றைத் தலைவலியுடன் ஏற்படும் கடுமையான வாந்தி ஏற்படும். இதற்கு புதினா சாற்றை மாதவிலக்கு காலங்களில் தொடர்ந்து பருகி வந்தால் உடனே தலைவலி, வயிற்றுவலி, வாந்தி நிற்கும். இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் புதினா சாற்றை தினம் ஒருவேளை பருகி வந்தால் இளமை ஊஞ்சலாடும்.

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

இளமை ஊஞ்சலாட நினைக்கிறவங்க இதை தினம் சாப்பிடணும் !
group of happy young people jumping at the beach on beautiful summer sunset

புதினா மூலம் கிடைக்கும் அற்புதங்கள்.

1.புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறாது.

2.அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும்.

3.ரத்தத்தை சுத்திகரிக்கும்.

4.வாயு தொல்லையை நீக்கி வயிற்று புழுக்களை அழிக்கும்.

5.புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

6.மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்தது.

7.முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

8.புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

9.புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

இளமை ஊஞ்சலாட நினைக்கிறவங்க இதை தினம் சாப்பிடணும் !