தொற்று நோய் முதல் புற்றுநோய் வரை… துளசியில் இவ்வளவு மகத்துவமா?

 

தொற்று நோய் முதல் புற்றுநோய் வரை… துளசியில் இவ்வளவு மகத்துவமா?

இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதும் செடி துளசி. மிகவும் எளிதாக வளரக் கூடிய தாவரம். மருத்துவ பயன்கள் நிறைந்தது. பாக்டீரியா, வைரஸ் கிருமித் தொற்றைத் தடுப்பதில் தொடங்கி மன அழுத்தம் வரை பல்வேறு பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக துளசி உள்ளது.

துளசியில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், துத்தநாகம், இரும்புச் சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. வைட்டமின் சி, துத்தநாகம் இருக்கிறது என்றாலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தொற்று நோய் முதல் புற்றுநோய் வரை… துளசியில் இவ்வளவு மகத்துவமா?

தினமும் இரண்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

துளசி செடியின் அனைத்துப் பகுதிகளிலும் அடாப்டோஜன் என்ற ரசாயனம் உள்ளது. இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆயுர்வேத ஆய்வுகளில் துளசியில் மன அழுத்தம், மனப் பதற்றத்தைத் தணிக்கும் ரசாயனம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் மன அழுத்தப் பாதிப்பு தவிர்க்கப்படும்.

துளசி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸாக செயல்படுகிறது. இது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது.

துளசி ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், ஆன்டி ஃபங்கல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. புண்களின் மீது துளசியைக் கசக்கி சாறு எடுத்து அப்படியே வைத்தால் புண்கள் விரைவாக ஆறும்.

வாய்ப் புண், முகப்பரு, முகத்தில் ஏற்பட்ட வடுக்களை ஆற்றும் சக்தி துளசிக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் துளசிச் செடியன் அனைத்து பாகங்களையும் சாப்பிடலாம். துளசி இலையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உடல் எடை குறைப்பு, ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கச் செய்வது, கெட்ட கொழுப்பைக் குறைப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் துளசிக்கு உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் தண்ணீரில் துளசி இலைகளைப் போட்டு சாறு இறங்கும் வரை விட்டு பின்னர் அருந்தி வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

உடலில் ஏற்படும் சூடு கட்டிகளை நீக்கும் ஆற்றல் துளசிக்கு உள்ளது. துளசி இலையை நீர்விட்டு அரைத்து கொப்புளங்கள் மீது தடவி வந்தால் அவை நீங்கும்.