சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

 

சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘இந்தியாவில் ஜூன் 8-ம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுக்கு 7 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி வரை, 33 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 286 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும், சென்னையில் தொற்று தீவிரம் அதிகமாக இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 298 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், சென்னையில் ஊரடங்கைத் தளர்த்துவதற்குப் பதில், ஊரடங்கைக் கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் திட்டம் உள்ளதா என்பது பற்றி தமிழக அரசு நாளைக்கு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளில் 70 சதவிகிதம் சென்னையில் ஏற்பட்டுள்ளதால் பொது நலன் கருதி கேட்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.