பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

 

பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

ஹரியானா மாநிலம் குண்டில் என்ற பகுதியில் டிக் டாக் பிரபலமான ஷிவானி என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இவருடன் இணைந்து நீரஜ் என்பவரும் பியூட்டி பார்லரில் பார்ட்னராக இருந்து வந்துள்ளார்.

பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

இதையடுத்து நீராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அழகு நிலையம் வந்துள்ளார். அப்போது அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது என்னவென்று உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஷிவானி படுக்கையில் மிகவும் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார் இதையடுத்து நீரஜ் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஷிவானி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது செல்போன் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

இதனிடையே ஷிவானியின் பெற்றோர் ஆரிப் என்ற இளைஞர் மீது புகார் கொடுத்தது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக சிவானியை காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்த ஆரிப் மீது ஷிவானியின் பெற்றோர் சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆரிப் தொடர்ந்து ஷிவானியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஷிவானி தனது சகோதரியின் செல்போனுக்கு ஆரிப் தன்னை பார்க்க பியூட்டி பார்லருக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் அன்றிரவு ஷிவானி வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஷிவானியின் சகோதரி செல்போனுக்கு மீண்டும் தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு வருகிறேன் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 ஆரிப்பை பிடித்து போலீசார் விசாரணை நடத்த அவர் ஷிவானியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு ஷிவானியின் அழகு நிலையத்திற்கு சென்று அவருடன் தகராறு செய்ததுடன் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் செல்போனில் அவரின் சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு செல்போனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இளம் பெண் ஷிவானி கொலை செய்த வழக்கில் ஆரிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.