பள்ளிக்கு போன பிசிக்ஸ் டீச்சர் -அள்ளிக்கிட்டு போன ஆண்கள் -திணறும் போலீஸ் ,கதறும் தந்தை.

 

பள்ளிக்கு போன பிசிக்ஸ் டீச்சர் -அள்ளிக்கிட்டு போன ஆண்கள் -திணறும் போலீஸ் ,கதறும் தந்தை.


ஒரு பள்ளிக்கூடம் சென்ற ஒரு பெண் டீச்சரை, மூன்று ஆண்கள் காரில் கடத்தி சென்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தின் பிவானியில் ஒரு 25 வயதான பெண் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிசிக்ஸ் டீச்சராக பணி புரிகிறார் .அந்த டீச்செர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார் .அவர் தினமும் தன்னுடைய காரில், தான் வேலை பார்க்கும் பள்ளி கூடத்திற்கு சென்று வருவார் .இதை அந்த பகுதியிலிருந்த சில வாலிபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .

பள்ளிக்கு போன பிசிக்ஸ் டீச்சர் -அள்ளிக்கிட்டு போன ஆண்கள் -திணறும் போலீஸ் ,கதறும் தந்தை.


இந்நிலையில் அந்த டீச்சர் கடந்த புதன் கிழமையன்று அந்த பள்ளிக்கு வேலைக்கு சென்றார் .அதன் பிறகு அன்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார் .அப்போது அவரை மூன்று ஆண்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள் .அப்போது ஒரு தனிமையான இடத்தில் அந்த டீச்சர் வந்து கொண்டிருந்த போது ,அவரை மூன்று ஆண்களும் வழி மறித்தார்கள் ,.அதன் பிறகு அவர்கள் அவரை தங்களின் காரில் அள்ளி போட்டுகொண்டு சென்றார்கள் .
பின்னர் தன்னுடைய மகள் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பாததால் கவலை பட்ட அவரின் தந்தை ,தன்னுடைய மகளுக்கு போன் செய்து பார்த்தார் .அப்போது அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த டீச்சரை கடத்திய நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள் .இந்நிலையில் பட்டப்பகலில் ஒரு பெண் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அந்த கிராமத்த்து மக்களிடையே பீதியை உண்டாக்கியது .அதனால் அந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு கேட்டு போராட்டம் நடத்தினார்கள் .

பள்ளிக்கு போன பிசிக்ஸ் டீச்சர் -அள்ளிக்கிட்டு போன ஆண்கள் -திணறும் போலீஸ் ,கதறும் தந்தை.