ஹரியானா: சூரிய கிரகண வழிபாட்டில் பங்கேற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!

 

ஹரியானா: சூரிய கிரகண வழிபாட்டில் பங்கேற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!

ஹரியானாவில் சூரிய கிரகண வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழந்தார். தற்போது ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றதாகவும் அதன் மூலம் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஹரியானா: சூரிய கிரகண வழிபாட்டில் பங்கேற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!ஹரியானாவின் குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள தானேசர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் சுபாஷ் சுதா. சூரிய கிரகணத்தன்று நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார். அதிலிருந்து இவருக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ-வின் குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ-வின் மனைவிக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது. இருந்தாலும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஹரியானாவில் இதுவரை 13,829 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். குருஷேத்ரா மாவட்டத்தில் கொரோனா மரணம் எதுவும் இல்லை. ஆனால், 115 பேருக்கு கொரேனா உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.