ஐசியூவில் சிகிச்சை பெறுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!

 

ஐசியூவில் சிகிச்சை பெறுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!

தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி வழங்கப்படும் என அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

ஐசியூவில் சிகிச்சை பெறுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது.

இந்நிலையில் மனோகர் லால் கட்டார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அல்லது ஐ.சி.யூ ஆதரவில் சிகிச்சை பெற்று வரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ உதவிக்காக ஒரு நாளைக்கு ரூ .5,000 வீதம் ஏழு நாட்களுக்கு ரூ.35,000 மருத்துவ உதவி வழங்கப்படும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.