விவசாயிகளின் நலனே முக்கியம்! சட்டென்று பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்!

 

விவசாயிகளின் நலனே முக்கியம்! சட்டென்று பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ள ஹர்ஷிம்ரத், விவசாயிகளுக்கு மகளாகவும், சகோதரியாகவும்
துணை நிற்பதில் பெருமை அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கிச்சடி தேசிய உணவு என தகவல் வெளியான நிலையில் கிச்சடியைத் தேசிய உணவாகத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறப்படும் கதைகளை நம்ப வேண்டாம் என்று உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் விளக்கமளித்திருந்தார்.