முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

 

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா பரவலால் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “இளம் மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட்தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தள்ளிவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பை தற்போது மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.