நகைகளுடன் சுற்றித்திரிந்துவந்த ஹரி நாடார் மோசடி புகாரில் கைது

 

நகைகளுடன் சுற்றித்திரிந்துவந்த ஹரி நாடார் மோசடி புகாரில் கைது

புகார் தொடர்பாக ஹரி நாடார் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகைகளுடன் சுற்றித்திரிந்துவந்த ஹரி நாடார் மோசடி புகாரில் கைது

கேரள மாநிலம் கோவளத்தில் ரூ.16 கோடி மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கு நடந்த மோசடி என்பது குறித்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை போட்டியிட்டு 37,627 வாக்குகளை ஹரி பெற்றிருந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேல இலந்தைக்குளம் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஹரிநாடார் நாளடைவில் தொழிலதிபராக உருவெடுத்து, நடமாடும் நகைக்கடை போல வலம் வந்த எப்போதும் 12 கிலோ எடை கொண்ட நகைகளை அணிந்திருப்பார். இதனால் திருவனந்தபுரத்தில் அண்மையில் வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.