ஹர்பஜன் சிங் விலகல் – CSK –க்கு கோப்பை கனவுதானா?

 

ஹர்பஜன் சிங் விலகல் – CSK –க்கு கோப்பை கனவுதானா?

நட்சத்திர வீரர்கள் போட்டியிலிருந்து விலக விலக ஐபிஎல் போட்டிகளின் சுவாரஸ்யங்கள் குறைந்துகொண்டே வருகின்றன.

ஐபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஹர்பஜன் சிங் விலகல் – CSK –க்கு கோப்பை கனவுதானா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதற்கு முன் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர். அது முடிந்து ஐக்கிய அமீகரம் சென்றனர்.

சென்னையில் நடந்த பயிற்சிக்கு ஜடேஜாவும் ஹர்பஜன் சிங்கும் வர வில்லை. ஆனால், ஜடேஜா நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு வந்துவிட்டார். ஆனால், ஹர்பஜன் சிங் இரு வாரங்கள் கழித்து கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹர்பஜன் சிங் விலகல் – CSK –க்கு கோப்பை கனவுதானா?

திடீரென்று இன்று ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறார் எனும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரத்யேகமாக எந்தக் காரணமும் சொல்லப்படாமல், சொந்த காரணங்களால் விலகுகிறார் என்று மட்டுமே சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் பந்துவீச்சாளர் தீபக் சாஹரும் ஒருவர். அதனால் அவர் தொடக்கப் போட்டிகளில் பந்து வீச இறக்கப்படுவாரா என்ற சந்தேகம் இருக்கிறது. இப்போது ஹர்பஜனும் இல்லையெனில் பந்து வீச்சில் பெரும் பின்னடைவை சிஎஸ்கே சந்திக்க நேரிடும்.

ஹர்பஜன் சிங் விலகல் – CSK –க்கு கோப்பை கனவுதானா?

குறிப்பாக, ஃப்ர்ஸ்ட் பேட்டிங் எடுக்கும் மேட்ச்களின் செகண்ட் இன்னிங்ஸில் எதிரணியைக் கட்டுக்குள் நிறுத்துவது பெரும் போராட்டமாக இருக்கும். பவுலிங் இப்படியெனில் இன்னொரு பக்கம் பேட்டிங்கின் பெரும் தூணில் விரிசல் விழுந்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா குடும்ப விவகாரங்களால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. எப்போதும் ரெய்னாவை சிஎஸ்கேவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கு ஏற்ப ஐபிஎல் என்றால் வெறி பிடித்ததைப் போல ரன் மிஷினாகி விடுவார் ரெய்னா.

ஹர்பஜன் சிங் விலகல் – CSK –க்கு கோப்பை கனவுதானா?

இப்போதைய நிலையில் சுரேஷ் ரெய்னாவும் ஹர்பஜன் சிங்கும் இல்லை. கொரோனாவால் வீரர்கள் பாதிப்பு. இந்தச் சூழலில் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸின் கோப்பை வெல்லும் லட்சியம் நடக்குமா என்பது பெரும் கேள்விக் குறிதான். ஆயினும் மஹேந்திர சிங் தோனி நிச்சயம் ஏதேனும் மேஜிக் செய்வார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.