“போட்டோ எடுத்து ,ஊடகத்தில் விட்டு ..”.ஈவ் டீசிங்கால் கல்லூரி மாணவி கவலைக்கிடம்.
ஒரு கல்லூரி மாணவியை தொடர்ந்து மூன்று வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார் .
உத்திரபிரேதேச மாநிலம் நொய்டாவின் அலிகாரில் ஒரு 17 வயது பெண் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் .அவர் வசிக்கும் பகுதியில் மூன்று வாலிபர்கள் அந்த பெண்ணை ஈவ் டீசிங் செய்துள்ளார்கள் .மேலும் அவருக்கு தெரியாமல் அவரை போட்டோ எடுத்துள்ளார்கள் .அந்தத் பெண்ணிடம் அந்த வாலிபர்கள் கல்லூரிக்கு போகும்போதெல்லாம் அவரிடம் அந்த பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்கள் .
அதனால் அந்த பெண் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டார் .மேலும் இந்த ஈவ் டீசிங் விஷயத்தை அவரின் பெற்றோரிமும் கூறியுள்ளார் .அதை கேட்டு அவர்கள் மிகவும் மன வருத்தமடைந்தார்கள் .அதனால் அந்த மூன்று வாலிபர்கள் மீது அவர்கள் போலீசில் புகார் தந்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் ,அந்த வாலிபர்கள் அந்த பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்து வழக்கை வாபஸ் பெருமாறு மிரட்டினார்கள் .மேலும் அந்த பெண்ணிடமும் போன் செய்து அவரின் போட்டோவை ஊடகத்தில் வெளியிடப்பபோவதாக மிரட்டினார்கள் .அவர்கள் சொன்ன படியே அந்த பென்ணின் போட்டோவை ஊடகத்தில் வெளியிட்டும் விட்டார்கள் .அதனால் அந்த பெண் அவமானத்தால் கூனி குறிகிவிட்டார் .அவரின் தோழிகள் அவருக்கு போன் செய்து இந்த விஷயம் பற்றி கேட்டுள்ளார்கள் .அதனால் மிகவும் மனமுடைந்த அந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விஷமருந்தினார் .அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .மேலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க அரசியல் தலையீடுகள் இருப்பதாக அவரின் தந்தை குற்றம் சாட்டினார்.