“வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்” திருமாவளவனின் பொங்கல் வாழ்த்து!

 

“வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்” திருமாவளவனின் பொங்கல் வாழ்த்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்” திருமாவளவனின் பொங்கல் வாழ்த்து!

தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படும் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டப்படுகிறது. ஜனவரி 14 ஆம் தேதி தை பொங்கல், 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை பொங்கல் அன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்படும். மறுநாள் மாட்டு பொங்கலன்று விவசாயத்திற்கு பெரிதும் உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளை அலங்கரித்து பொங்கல் வழங்கி கொண்டாடுவர். காணும் பொங்கலன்று உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் அன்பை பரிமாறி கொள்வர். இந்த கொண்டாட்டமான சூழலில், டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். விவசாயம்,விவசாயிகள்,விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபபடுத்துவோம். வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.