பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து!

 

பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து!

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து!

புதிய நம்பிக்கையுடன் 2021ல் அடியெடுத்து வைத்து உள்ளார்கள் நாட்டு மக்கள். கொரோனா நோய் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர் . உயிர்பலி, நோய் தொற்று, ஊரடங்கு என தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வந்தனர். ஆனாலும் மனம் தளராமல் புதிதாக பிறந்துள்ள புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் தமிழக மக்கள்.

பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து!

புத்தாண்டை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. குறிப்பாக தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு 2020 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, 2021-ம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிக்கட்டும் என்றும் புத்தாண்டில் ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கை மேலோங்கட்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.