நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்!

 

நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்!

வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றுதான் நினைப்போம். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடியாக அமைந்திருந்தாலும் கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.

நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்!

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடியாக அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்!

அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வங்களை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் மற்றும் வழிபடும் முறைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதில், ஒன்றுதான் நவக்கிரகங்களையும் தன் குறும்புதனத்தால் கட்டுப்படுத்திய ஸ்ரீ ராம பக்தன் அனுமனை வழிப்பட்டாலே எல்லா தோஷங்களும் நீங்கும். அதிலும், நம்மை ஆட்டுவித்து படாய்படுத்தும் சனி பகவானை நம்மை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வார் வாயு மைந்தன்.
அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை சாற்றி தினமும் காலை 9முறை என 48நாட்கள் பாராயணம் செய்து வர நவகிரக தோஷங்கள் நீங்கும்.