10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… நெசவு தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது…

 

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… நெசவு தொழிலாளி  போக்சோ சட்டத்தில் கைது…

நாமக்கல்

ராசிபுரம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விசைத்தறி தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணாந்தூர் ஓ.சௌதாபுரத்தை சேர்ந்தவர் குருநாதன் (48). நெசவு தொழிலாளியான, இவர் அதே பகுதியில் உள்ள நெசவு பட்டறையில் பணிபுரிந்து வந்தார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… நெசவு தொழிலாளி  போக்சோ சட்டத்தில் கைது…

இந்த நிலையில், பணிபுரியும் பட்டறையின் எதிர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு, குருநாதன் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் வெண்ணாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் மீது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குருநாதன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.