“பையன்களுக்கும் பாதுகாப்பில்லையே”-சிறுமிகளை போலவே பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுவர்கள்

 

“பையன்களுக்கும்  பாதுகாப்பில்லையே”-சிறுமிகளை போலவே பாலியல் கொடுமைக்கு ஆளாகும்  சிறுவர்கள்

நாட்டில் செல்போன்களில் ஆபாச படங்களை அரங்கேறியதால் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆபாச படங்களின் தாக்கத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .பெண்களை போலவே சிறுவர்களும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு அடிக்கடி ஆளாகும் சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி வருகின்றன

“பையன்களுக்கும்  பாதுகாப்பில்லையே”-சிறுமிகளை போலவே பாலியல் கொடுமைக்கு ஆளாகும்  சிறுவர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பரேலியில் ஒரு பத்து வயது சிறுவன் இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால் வீட்டின் அருகே உள்ள ஒரு மாட்டு வண்டியில் உற்சாகமாக தனியே விளையாடிக்கொண்டிருந்தான் .அப்போது அந்த வழியாக வந்த சில மர்ம நபர்கள் அந்த சிறுவனை அங்குள்ள வயல் வெளிக்கு ஏதேதோ சொல்லி ஆசை காமித்து அழைத்து சென்றுள்ளார்கள் .
பிறகு அந்த சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு அந்த சிறுவன் இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லி விடக்கூடும் என்று அஞ்சிய அந்த மர்ம நபர்கள் அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாமென்றும் கூறப்படுகிறது .
அந்த சிறுவனின் உடல் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் அரை நிர்வாண நிலையிலும் ,கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்டதாக போலீசார் கூறினார்கள் .பிறகு அந்த சிறுவன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் .அந்த சிறுவன் எதனால் கொல்லப்பட்டான் என்ற முழு விவரம் அவரின் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிவிக்கப்படுமென்று போலிசார் கூறினார்கள் .ஆனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர்தான் இந்த சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொன்றிருக்கலாமென்று அந்த பகுதி மக்கள் சிலர் கூறினார்கள் .இந்த மர்ம கொலை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

“பையன்களுக்கும்  பாதுகாப்பில்லையே”-சிறுமிகளை போலவே பாலியல் கொடுமைக்கு ஆளாகும்  சிறுவர்கள்