மொழி தொடர்பான கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டது! – ப.சிதம்பரம் ட்வீட்

 

மொழி தொடர்பான கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டது! – ப.சிதம்பரம் ட்வீட்

கனிமொழிக்கு ஏற்பட்டது போன்ற கசப்பான அனுபவம் தனக்கும் ஏற்பட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மொழி தொடர்பான கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டது! – ப.சிதம்பரம் ட்வீட்
விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கேள்வி

http://

எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மொழி தொடர்பான கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டது! – ப.சிதம்பரம் ட்வீட்

கனிமொழிக்கு நேர்ந்த நிகழ்வு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

http://


இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.

http://


இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.