திமுக அரசு வெளியிட்ட ஒரு அறிவிப்பு… கொதித்தெழுந்த ஹெச்.ராஜா – வீதியில் இறங்க போவதாக தகவல்!

 

திமுக அரசு வெளியிட்ட ஒரு அறிவிப்பு… கொதித்தெழுந்த ஹெச்.ராஜா – வீதியில் இறங்க போவதாக தகவல்!

திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் 51ஆவது பட்டத்திற்கு காலியாகவுள்ள பதவிக்கு நியமனம் செய்திட அறிவிப்பு ஒன்றை கோயில் அறங்காவலர் குழு வெளியிட்டுள்ளது. ஜீயர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜூன் 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அரசு வெளியிட்ட ஒரு அறிவிப்பு… கொதித்தெழுந்த ஹெச்.ராஜா – வீதியில் இறங்க போவதாக தகவல்!

தற்போது இது பாஜக ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பாஜக தலைவர் ஹெச்.ராஜா, “இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக தமிழ்நாடு பாஜக பொருளாளர், “ஆட்டை கடித்து மாட்டை கடித்து – இப்போது இந்து சாமியார் மடத்தை கடிக்க ஆரம்பித்துள்ளது #திமுகஅரசு கோவிலுக்கு புகுந்த கடவுள் மறுப்பாளர்கள் இப்போது மடத்துக்குள் புக முயற்சி இந்துக்கள் வெறும் பார்வையாளரா? போர்ப்படையினரா? சிந்திப்பீர்’’ என்று ட்வீட் செய்திருந்தார். இதேபோல பல்வேறு பாஜக ஆதரவாளர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.