“சசிகலா சுதந்திர பறவையாகி விட்டார்” – ஹெச்.ராஜா

 

“சசிகலா சுதந்திர பறவையாகி விட்டார்” – ஹெச்.ராஜா

ராகுல் காந்தியை விஷயம் தெரிந்தவர் என்று கூறுபவர்கள் விஷயம் தெரியாதவர்களாக தான் இருப்பார்கள் என்று ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

“சசிகலா சுதந்திர பறவையாகி விட்டார்” – ஹெச்.ராஜா

தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. சட்டமன்ற நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக தேர்தல் பரப்புரையை சேலத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்.இந்த வரிசையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். முன்னதாக ராகுல் காந்தி தமிழகத்திற்கு 3 நாட்கள் வருகை புரிந்து மக்களை சந்தித்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்து விட்டு சென்றார்.

“சசிகலா சுதந்திர பறவையாகி விட்டார்” – ஹெச்.ராஜா

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்ப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தமிழக மக்கள் நிதி அளிக்க வேண்டும். கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைவர் எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக கட்டுப்பட்டு நடக்கும். இந்தியாவைப் பற்றி ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் எதுவும் தெரியாது. ராகுல் காந்தியை விஷயம் தெரிந்தவர் என்று கூறுபவர்கள் விஷயம் தெரியாதவர்களாக தான் இருப்பார்கள். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சுதந்திர பறவையாகி விட்டார். இனி அவரது முடிவுகளை அவரே எடுப்பார்” என்றார்.