கூட்டணி வேறு; போராட்டம் வேறு- ஹெச். ராஜா

 

கூட்டணி வேறு; போராட்டம் வேறு- ஹெச். ராஜா

அதிமுகவுடனான கூட்டணி வேறு எங்கள் போராட்டம் வேறு என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “திமுகவினர் தனித்தனியாக போராட்டம் நடத்திய போது அதற்கு தடை விதிக்கவில்லை, அரசு விழாக்கள் நடக்கிறது அதற்கும் தடை இல்லை. பண்டிகை காலங்கள் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள் அதற்கும் தடை இல்லை, ஆனால் பிஜேபி நடத்தும் யாத்திரைக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? எதிர்க்கட்சிகளின் மிரட்டலின் காரணமாகவே அதிமுகவினர் எங்களுக்கு அனுமதி மறுக்கிறார்களா என்பது தெரியவில்லை. திருமாவளவன் போன்ற நபர்கள் அசிங்கமாக பேசிக் கொண்டு வருகிறார்கள். அவரை இதுவரை யாரும் கைது செய்யவில்லை.

கூட்டணி வேறு; போராட்டம் வேறு- ஹெச். ராஜா

வேல் யாத்திரைக்கு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தடைக்கு தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாத்திரைக்கு அனுமதி தரவில்லை என்றாலும் மூன்றாவது நாளும் நடந்து கொண்டு இருக்கிறது. டிசம்பர் 6 வரை இந்த யாத்திரை நடக்கும். அதில் அகில இந்திய தலைவர்கள் பலர் பங்கு கொள்வார்கள். தேவர் குரு பூஜையில் ஸ்டாலின் விபூதியை கீழே போட்டு மனதை புண்படுத்தியுள்ளார். அவரை அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும். கூட்டணி குறித்து அகில இந்திய தனது தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணி வேறு எங்கள் போராட்டம் வேறு ” என தெரிவித்தார்.