முட்டாள்கள் உலகமாக தமிழ்நாட்டு மாற்றப்பட்டுள்ளது – ஹெச். ராஜா

 

முட்டாள்கள் உலகமாக தமிழ்நாட்டு மாற்றப்பட்டுள்ளது – ஹெச். ராஜா

பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமல்ஹாசன் ஒரு முட்டாள் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

முட்டாள்கள் உலகமாக தமிழ்நாட்டு மாற்றப்பட்டுள்ளது – ஹெச். ராஜா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேக்கானூரணியில் மலிவு விலையில் மக்கள் மருந்தகம் ஒன்றை ஹெச். ராஜா திறந்துவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, ஆனால் பற்றாக்குறை இருப்பதாக பலர் வதந்திகளை பரப்பி வருகிறனர். ஸ்டாலின் முட்டாள் என அனைவருக்கும் தெரியும்,

அதேபோல் பெரியாரை பின்பற்றுவதாகக் கூறும் கமல்ஹாசனும் முட்டாள். நடிப்பு மட்டுமே கமலுக்கு தெரியும். முட்டாள்கள் உலகமாக தமிழ்நாட்டு மாற்றப்பட்டுள்ளது. கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எதைக் கண்டாலும் கமல்ஹாசனுக்கு பயம். பின்னர் எப்படி அவர் உலக நாயகனாக மாறுவார்.” எனக் கூறினார்.