“போலி விவசாயிகள் தான் டெல்லியில் போராடுகிறார்கள் – ஹெச்.ராஜா விமர்சனம்!

 

“போலி விவசாயிகள் தான் டெல்லியில் போராடுகிறார்கள் – ஹெச்.ராஜா விமர்சனம்!

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே இல்லை என பாஜகவின் ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், போலி விவசாயிகளை வைத்து டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது என்றும் யார் விவசாயம் செய்யவில்லையோ அவர்கள் தான் டெல்லியில் போராடுகின்றனர் என்றும் பாதாம், பிஸ்தா மற்றும் மசாஜ் சென்டர்களை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

“போலி விவசாயிகள் தான் டெல்லியில் போராடுகிறார்கள் – ஹெச்.ராஜா விமர்சனம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 24ஆவது நாளாக டெல்லியின் புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளுக்கு நாள் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். அவர்களுடன் நடத்தப்பட்ட அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவில்லை என்றால் ஒரு வருடம் ஆனாலும் போராட்டத்தை தொடருவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

“போலி விவசாயிகள் தான் டெல்லியில் போராடுகிறார்கள் – ஹெச்.ராஜா விமர்சனம்!

டெல்லியில் நிலவும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை உயிரிழந்திருப்பதாக பதைபதைக்கும் செய்திகள் வெளியாகின்றன. இவ்வாறு போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கையில் அவர்கள் போலி விவசாயிகள் என ஹெச்.ராஜா தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.