நள்ளிரவில் பெண்களுக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக நிற்பார் -ஜிம் ட்ரைனரின் காம லீலைகள்

 

நள்ளிரவில் பெண்களுக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக நிற்பார் -ஜிம் ட்ரைனரின் காம லீலைகள்

ஒரு ஜிம்மில் ட்ரைனராக பணியாற்றும் ஒருவர் நூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டார்

டெல்லியை சேர்ந்த விகாஸ் குமார் என்ற 30 வயதான நபர் அங்குள்ள ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றுகிறார் .அவர் பேஸ்புக்கில் 2000க்கும் மேற்பட்ட பெண்களோடு நட்பு கொண்டு அவர்களின் செல்போன் எண்களை வாங்கி வைத்து கொண்டார்
மேலும் அவர் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் 100 க்கும் மேற்பட்ட பெண்களைத் பாலியல் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் பெண்களுக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக நிற்பார் -ஜிம் ட்ரைனரின் காம லீலைகள்


அவர் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பல பெண்களுக்கு ஆபாச செய்திகளையும், வீடியோக்களையும் அனுப்புவதாக ஒரு பெண் அவர் மீது புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் நள்ளிரவில் பல பெண்களுக்கு வீடியோ கால் செய்து அவர்களிடம் நிர்வாணமாக நின்றுள்ளார் .
அவரின் புகாரின் அடிப்படையில் டெல்லி காவல்துறையின் சைபர் செல் விசாரணைகளைத் தொடங்கியது. புலனாய்வாளர்கள் பேஸ்புக் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் இருந்து விவரங்களைப் பெற்றனர். அப்போது அவர் பல பெண்களை குறிவைத்து பல பெண்களின் பெயர்களில் பல போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கியிருப்பது தெரிய வந்தது.
மேலும் தொழில்நுட்ப பரிசோதனையில் குற்றம் சாட்டப்பட்டவர் விகாஸ் குமார் என்ற உடற்பயிற்சி பயிற்சியாளர் என்று அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, அவரால் பாதித்த ஒரு பெண், சைபர் க்ரைமில் அளித்த புகாரைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் அவரை சனிக்கிழமை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்தனர்.,