வேனில் கடத்தப்பட்ட 50 மூட்டை குட்கா பறிமுதல்; 5 பேர் கைது!

 

வேனில் கடத்தப்பட்ட 50 மூட்டை குட்கா பறிமுதல்; 5 பேர் கைது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். இதனிடையே குட்காவுக்கான மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் குட்காவே கடத்தப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வேனில் கடத்தப்பட்ட 50 மூட்டை குட்கா பறிமுதல்; 5 பேர் கைது!

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேனில் கடத்தப்பட்ட 50 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் இருந்து வேன்களில் 50 மூட்டை குட்காவை கடத்திக் கொண்டு 5 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்துள்ளது. அங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், வாகனங்களில் குட்கா கடத்தப்பட்டதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், குட்காவை கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காஞ்சிபுரத்துக்கு குட்காவை கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது.