திருநின்றவூரில் 329 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது!

 

திருநின்றவூரில் 329 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குட்காவுக்கான மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் குட்காவே கடத்தப்படுகின்றன. சமீபத்தில் கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று, வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் 50 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 5 பேர் கைது
செய்யப்பட்டனர்.

திருநின்றவூரில் 329 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது!

இந்த நிலையில், சென்னை அருகே திருநின்றவூரில் 329 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்துக்கு சென்ற போலீசார், ரூ.2 லட்சம் மதிப்பிலான 329 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.