ராசிபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்

 

ராசிபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி அருகே ராசிபுரம் காவல் ஆய்வாளர் பாரதிமோகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த தோஸ்த் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் குட்காவும் 2 மூட்டைகள் பான்மசாலாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்குமென தெரிகிறது.

ராசிபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்

ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிய நிலையில் ஆட்டோவில் இருந்த சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் (30) பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த கணபதி (47) மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த நிர்மல்சிங் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது என்ற விசாரணையை அவர்களிடம் துவக்கியுள்ளனர்.

ராசிபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்

விசாரணையின் முடிவில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .