சட்டப்பேரவையில் குட்கா : ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

 

சட்டப்பேரவையில் குட்கா : ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

சட்டப்பேரவையில் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த திமுக வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டுவந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 18 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு திமுக எம்எல்ஏக்கள் 18 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்து உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் குட்கா : ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

இருப்பினும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக்குழு மீண்டும் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏக்கள் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா,ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டப்பேரவையில் குட்கா : ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

இந்நிலையில் இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளார். முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா , குட்காவை பேரவையில் காட்ட கூடாது என்பது அரசாணையில் இல்லை. அவர்கள், உள்நோக்கத்துடன் கொண்டுவர வில்லை என்பதை தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.