குட்கா விவகாரம்: 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை!

 

குட்கா விவகாரம்: 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை!

குட்கா விவகாரத்தில் 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டுவந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 18 பேருக்கு உரிமைக்குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதை சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏக்கள் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

குட்கா விவகாரம்: 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை!

இந்நிலையில் குட்கா விவகாரத்தில் 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குட்கா விவகாரம்: 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை!

இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “ஆகஸ்ட் 25-ல் தீர்ப்பளித்தவுடன், செப்டம்பர் 7-ல் உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவை பேரவையில் காட்ட கூடாது என்பது அரசாணையில் இல்லை. அவர்கள், உள்நோக்கத்துடன் கொண்டுவர வில்லை என்பதை தலைமை நீதிபதி தெளிவு படுத்தியுள்ளார் என்று கூறியது கவனிக்கத்தக்கது.