திருப்பத்தூர்- மர்மநபர்கள் சுட்டதில் இளைஞர் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்
Oct 17, 2020, 12:40 IST1602918633000
திருப்பத்தூர்
வாணியம்பாடி அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வேலாயுதம் என்பவரது உடலில் குண்டுகள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்.
இவரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் இன்று ஏர்பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அவரது தாடை மற்றும் மார்பு பகுதிகளில் குண்டு பாய்ந்தன. மேலும் இதயத்தை நோக்கி சுடப்பட்ட குண்டுகள்,
பாக்கெட்டில் இருந்த செல்போன் மீது பாய்ந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் திமாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்